தனிநபர் அட்டை வங்கி.(SOLOCARD BANK SYSTEM ):
நமக்காக நம்மக்களுக்காக........
வருந்தி உழைகக்கும் வறியவர்களுக்காக.......
உண்மையாக உழைக்கும் உழைப்பாளிகளுக்காக....
ஏற்றம்பெற எண்ணும் ஏழைகளுக்காக............
இறுதியாண்டு ப்ராஜெக்ட் என்றதும் எதோ ஒரு கம்ப்யூட்டர் சென்டரில்
மொத்தமாக பணத்தைச் செலுத்தி விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள் மத்தியில்
தம் ப்ராஜெக்ட் மூலமாக மக்களுக்கு எதேனும் பயன்படவேண்டும் என்பதற்காக
தொடங்கப்பட்ட ஒரு அக்கறையுள்ள மாணவர்களின் ஒரு பயனுள்ள ப்ராஜெக்ட்
உங்களுக்காக!!!
விளக்கவுரை:
100கோடி மக்களுக்கும் பொதுவானதே நம் அரசின் கொள்கைகள்.ஒவ்வொரு
குடிமகனுக்கும் வேண்டியவற்றை பல நலத்திட்டங்கள் மூலம் செய்து வருகின்றன
நம் மத்திய,மாநில அரசுகள்.ஆனால் இவ்வாறாக அரசிலிருந்து வழங்கப்படும்
ஒவ்வொரு சலுகையும் முறைப்படி மக்களைச் சென்றடைகிறதா என்பதிலிருந்தே
ஆரம்பிக்கின்றது கேள்விக்குறி! மத்திய,மாநில அரசுகளிடம் இருந்து
வெளிவரும்ஒவ்வொரு திட்டமும் பலர் கைமாறியே மக்களுக்குச்செல்கின்றது.அதிலும் பல இன்னல்களுடன்..இந்த வழிமுறையை மாற்றி,முறைப்படிமக்களுக்குச் சேரும் அரசு->மக்கள் என்ற நேரடி முறையே எங்கள் தனிநபர்அட்டை வங்கி.(SOLOCARD BANK SYSTEM ). ஆண்டிற்கு 23இலட்சம்கோடித்தொகைஇந்த ஊழல்கள் மூலம் மட்டுமே அரசிற்கு இழப்பாகின்றது. 6கோடிமக்கள்,32மாவட்டங்கள்,220 தாலுகாக்கள்,6மாநகராட்சிகள் என பரந்து
இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் நம்தமிழ்நாட்டில்,ஏறக்குறைய அனைவருமே அரசின் திட்டங்களை அனுபவித்துவருகின்றனர். 2 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக நலத்திட்டங்கள்பெறுகின்றனர். இந்த அனைத்து திட்டங்களும் விசயங்களை அடிப்படையாககொண்டுள்ளன. ஒன்று "வயது", மற்றொன்று "வசிக்கும்
பகுதி(கிராமம்,நகரம்,..)". இவ்விசயங்களைக் கொண்டே எங்களின் ப்ராஜெக்ட்
அமையப்பெற்றது.
எங்களின் ப்ரொஜெக்ட் மூலம் அரசு உதவிதிட்டங்கள்ஒவ்வொன்றும் நேரடியாக மக்களே பெறமுடியும்.15 வயதிற்கு மேற்பட்டஅனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட உத்தரவிட்டுள்ளது நம் நடுவஅரசு.அதைப் போல நம் மாநிலத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவரின்பெயர்,முகவரி,இருப்பிட அடையாள எண்(area code),அட்டை எண் (id
number),பிரிவுஎண் (category number),அலுவலரின் முத்திரைஇருக்கும்.ஒவ்வொரு மாநகராட்சியும் அதிலுள்ள தாலுகாக்கள் வாரியாகவடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு என பகுதிவாரியாகபிரிக்கப்பட்டுஅனைவருக்கும்அடையாளஅட்டைவழங்கப்படும்.ஒவ்வொருஊரிலும் ஏ.டி.எம்சென்டர்கள் இருப்பது போல SOLOCARD BANK CENTREஅமைக்கப்படும்.தனிநபர்வங்கி மையமும்(scb center) ஒவ்வொருதாலுகாவிலும்அமைக்கப்படும்.
அடையாள அட்டை கார்டு(sim card)வடிவில் இருக்கும்.ஏ.டி.எம் கார்டில் உள்ள கோட்மேக்னடிக்முறையில்அறியப்படுமஇதன்மூலம்எளிதாக மற்றவர்கள் கோட்-டினை பெற இயலும்.ஆனால்நாம் வழங்கும் தனிநபர் அட்டையானது simcardவடிவில்இருக்கும்.இதனயாரும்எளிதாகcopy,hackசெய்யஇயலாது.தனிநபர்வங்கிமையமும்scbcenterஒவ்வொருதாலுகாவிலும்அமைக்கப்படும்.மக்களவயதினைக்கொண்டுஇளையோர்,சிறார்,மகளிர்,அலுவலர்,மூத்தகுடிமக்கள்,மாற்றுத்திறனாளிஎன பிரிக்கப்படுவர்.அவர்கள் பெறும் சலுகை,உதவித்தொகையின்அடிப்படையில்மாதந்தோறும் அவர்களின் SCB சேமிப்புக்கணக்கில் பணம்பதிவேற்றப்படும்.(எ.கா)விதவைகள் ஊக்கத்தொகை என்ற நலத்திட்டத்தின் கீழ்
ஒருவர் மாதந்தோறும் ரூ.500 பெறுவாராயின், அவரது கணக்கில் மாதந்தோறும்
ரூ.500 பதிவேற்றப்படும்.அவர் அதனை மாதத்தின் முதல் நாளில்எடுத்துக்கொள்ளலாம் அல்லது சேமிப்பாகவும் வைக்கலாம்.dynamicagecalculation algorithm மூலம் ஒருமுறை ஒவ்வொருவரின் வயதும் அப்டேட்செய்யப்பட்டு,அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் ஆட்டோமேட்டிக்அப்டேட்-ஆக செய்யப்படும்.இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு முறையும் அரசுஅலுவலகங்களில்காத்திருந்துதாமதம்ஆகததேவைஇல்லை.அரசு,அரசுப்பணியாளர்களுக்கும்ஒவ்வொரு முறையும் சரிபார்க்கும் பளுகுறையும்.
ஒரு பயனாளர் தன் கார்டை உள்நுழைத்தவுடன் அவரைப் பற்றிய அனைத்து
விவரங்களும் திரையில் தோன்றும்.நம் மக்களுக்கு புரியும் வகையில் ஒவ்வொரு
செயலுக்கும் குரல் பதிவு இருக்கும்.இதன் மூலம் படிக்காத மக்களும் எளிதாக
இயக்கலாம். பயனாளர் தம் பிரிவினைத் தேர்ந்தெடுத்து விட்டு,அவர் பெறும்
ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்ஒவ்வொரு முறையும் எவர்களின்
தலையீடுமின்றி எளிதாக மக்கள் தம் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். ஒவ்வொருமுறைப் பணப்பறிமாற்றம் நடக்கும் போது ரூ.11சேவைக்கட்டணமாகஎடுத்துக்கொள்ளப்படும்.இதில்ரூ.10 அப்பயனாளரின் சேமிப்பாகவும்,ரூ.1 சேவைக்கட்டணமாகவும் இருக்கும். இந்த சேவைக்கட்டணம் அரசிற்குச்
சென்று மீண்டும் நலத்திட்டங்கள் வடிவில் மக்களையடையும்.ஒவ்வொரு முறை
பரிவர்த்தனை முடிந்த பின்னும் பின்னூட்டங்கள்,குரல் பதிவு மூலம் தம்
எண்ணங்களை அரசிற்கு அனுப்பலாம்.ஒவ்வொரு பறிமாற்றத்தின் போதும் அரசு
அலுவலர்களைத் தொலைபேசி(interconnected tollfree phone) மூலம் தொடர்பு
கொண்டும் தமது கருத்துக்களைக் கூறலாம். இந்த அட்டையைப் கிரடிட்
கார்டாகவும்அரசுஅலுவலகங்கலில்(ரேசன்,விவசாய அலுவலகம்,தாலுகா
அலுவலகம்....) பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் ஸ்கேனர் இணைக்கப்பட்டு
சான்றிதழ் சரிபார்க்கவும் செய்யலாம்.
பொதுமக்கள் மட்டுமின்றி அரசுப் பணியாளர்களாக அன்றி
அரசுக்காக பாடுபடும் (எ.கா: சாலைப்பணியாளர்கள்.......)
வேலையாளிகளுக்கும்,இடைத்தரகர்கள் தலையீடின்றி அரசு நிர்ணயித்த தொகையைப்
பெறலாம்.லஞ்சமில்லா நாடு உருவாக எங்களின் சிறுமுயற்சி இது!!!
No comments:
Post a Comment