Sunday, May 29, 2011

விஜய் டி.வி-The real awrads







விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் இசை விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான இசை விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த பாடகருக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "ஹோசானா..." பாடலுக்காக, விஜய் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடகிக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "மன்னிப்பாயா..." பாடலுக்காக, ஸ்ரேயா ஹோசலுக்கும், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "மாலை நேரம்..." பாடலுக்காக, ஆண்ட்ரியாவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது, நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் பாடிய பாடலுக்கான விருது, "மன்மதன் அம்பு" படத்தில், "நீல வானம்..." பாடலுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடல் கம்போசிங்கான விருது, "பையா" படத்தில் "என் காதல் சொல்ல நேரமில்லை..." பாடலுக்காக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
புதுமுக இசையமைப்பாளர் விருது, "தமிழ்படம்" படத்திற்காக கண்ணனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சவுண்ட் மிக்சிங்கான விருது, கே.ஜெ.சிங், தீபக், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்க்கு வழங்கப்பட்டது.
இசை சக்கரவர்த்தி விருது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
இந்திய அளவில் இசையமைப்பில் சாதனை புரிந்ததற்காக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
2010ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு வழங்கப்பட்டது.
பிரபல பின்னணி பாடகருக்கான விருது "ராவணன்" படத்தில் "உசுறே போகுது..." பாடலுக்காக, கார்த்திக்கு வழங்கப்பட்டது.
சிறந்த டூயட் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "அடடா மழை..." பாடலுக்கு கிடைத்தது.
சிறந்த மெலோடிஸ் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "துளி.. துளி..." பாடலுக்கு கிடைத்தது.

Wednesday, May 25, 2011

proud to be an INDIAN
























"I AM AN INDIAN'
 The co-founder of Sun Microsystems- Vinod Khosla
 the creator of Pentium chip (needs no introduction as 90% of the today's computers run on it)-Vinod Dahm
 The third richest man on the world According to the latest report on Fortune Magazine, it is Azim Premji, who is the CEO of Wipro Industries. The Sultan of Brunei is at 6th position now.
 The founder and creator of Hotmail (Hotmail is world's No.1 web based email program)- Sabeer Bhatia
 The president of AT & T-Bell Labs (AT & T-Bell Labs is the creator of program languages such as C, C++, Unix to name a few)- Arun Netravalli .
 the GM of Hewlett Packard-Rajiv Gupta
 the new MTD (Microsoft Testing Director) of Windows 2000, responsible to iron out all initial problems?-A. Sanjay Tejwrika .
 the Chief Executives of CitiBank-Mckensey & Stanchart,Victor Menezes, Rajat Gupta, and Rana Talwar.
 We Indians are the wealthiest among all ethnic groups in America, even faring better than the whites and the natives. There are 3.22 millions of Indians in USA (1.5% of population). YET,

 38% of doctors in USA are Indians.
 12% scientists in USA are Indians.
 36% of NASA scientists are Indians.
 34% of Microsoft employees are Indians.
 28% of IBM employees are Indians.
 17% of INTEL scientists are Indians.
 13% of XEROX employees are Indians.

 You may know some of the following facts. These facts were recently published in a German magazine, which deals with WORLD HISTORY FACTS ABOUT INDIA.
1. India never invaded any country in her last 1000 years of history.
2. India invented the Number system. Aryabhatta invented 'zero.'
3. The world's first University was established in Takshila in 700BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century BC was one of greatest achievements of ancient India in the field of education
4. According to the Forbes magazine, Sanskrit is the most suitable language for computer software.

5. Ayurveda is the earliest school of medicine known to humans.
6. The art of navigation was born in the river Sindh 5000 years ago. The very word "Navigation" is derived from the Sanskrit word NAVGATIH.
7. The value of pi was first calculated by Budhayana, and he explained the concept of what is now known as the Pythagorean Theorem. British scholars have last year (1999) officially published that Budhayan's works dates to the 6th Century, which is long before the European mathematicians.
8. Algebra, trigonometry and calculus came from India. Quadratic equations were by Sridharacharya in the 11th Century; the largest numbers the Greeks and the Romans used were 106 whereas Indians used numbers as big as 1053.
9. According to the Gemological Institute of America, up until 1896, India was the only source of diamonds to the world
10. Chess was invented in India.

பெண்













அன்று!
தந்தையின் கண்ணீர்,அன்னையின் அழுகுரல்
கடந்து மண்ணில் விழுந்தேன் நான்...
மண்ணைத் தொட்டதும் என்னைத் தொட்டனரோ
இல்லையோ... என் பெண்மையைத் தொட்டு என்னைத்
தொடவில்லை எவரும்..
கரைபடிந்த மனிதரெல்லாம் கரைவேட்டிகளிலிருக்க
கள்ளமறியா நாங்கள் மட்டும் கரைந்தோம்....
கருவறைக்குமின்றி கல்லறைக்குமின்றி கருவிலேயே
கலைந்தோம்....
தீண்டாமலிருக்க நாங்கள் என்ன பாம்பா?
தொடமலிருக்க நாங்கள் என்ன மின்சாரம?
வீட்டினுள் சிறை,கயவருக்கு இரை
அடிமைகளாய் சிறை,இதுவே எங்கள் வரையறை..
எதிர்பார்ப்புகள் எமாற்றங்களான பின் எண்ணங்களும்
எழுச்சியுறவில்லை...
நளினமென்னும் பெயரால் நசுக்கப்பட்டோம்..
அழகென்னும் பெயரால் அடிமையக்கப்பட்டோம்..
வெட்கமென்னும் பெயரால் வெகுளியாக்கப்பட்டோம்..

இன்று

மலர்ப்பாதைகள் எங்களை வரவேற்கத் தயாராக
உள்ளபோது நாங்கள் ஏன் முட்களுக்கு இரத்ததானம்
செய்யவேண்டும்?...
சொர்க்கம் எங்களைச் சிங்காரிக்கத் தயாராக
உள்ளபோது நாங்கள் ஏன் நரகத்தில் நாற்காலி கேட்க
வேண்டும்?...
என பட்டறிவு பகுத்தறிவூட்ட பயணிக்கின்றோம்
புதுவுலகில்..
சாதனைகள் மலைக்குமளவு சாதனைகள் புரிய
மனமிருக்க வானளவில் வளர்ந்தோம்...
தரணியெங்கும் பெண்கள் தலையெடுக்க
தனிச்சிறப்புடன் உயர்ந்தோம்..
பெண்வளர்ச்சியில்லா சமுதாயவளர்ச்சியில்லை என
பார் போற்ற திகழ்ந்தோம்..
பெண்வளர்ச்சியை மண்வளர்ச்சியாக்கி
மகத்துவங்கள் புரிகிறோம் இன்று..

நாளை!

ஆணுக்கு பெண் என்பது மேலாகி ஆணை விடப் பெண்
என்றாகும்..
பொறுமையுடன் பேறாற்றலும்,
அடக்கமுடன் ஆளுமையும்,
நளினமுடன் நாகரீகமும்,
அச்சமுடன் ஆர்வமும்,
நாணமுடன் நாவாற்றலும்,
மடமுடன் மாண்பும்,
பயிர்ப்புடன் பண்பும்,
கொண்டோராய் உலகை வென்றோராய்....
கனவுமங்கையாய்.......
by
YOURS SENTHAMIL

தலைவன் பிரபாகரன்



தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.
அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .
தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.
இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .
சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதுதமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்
தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .
பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.
தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பிடப்படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம் தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.

thanks: savukku blog

சுஜாதா



சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.
வாழ்க்கைக் குறிப்பு
ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
எழுதிய புதினங்கள்
பதவிக்காக,ஆதலினால்காதல்செய்வீர்,பிரிவோம்சந்திப்போம்,அனிதாவின்காதல்கள்,எப்போதும் பெண்,என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ,நிலா நிழல்,ஆ,கரையெல்லாம் செண்பகப்பூ,யவனிகா,கொலையுதிர் காலம்வசந்த் வசந்த்,ஆயிரத்தில் இருவர்,பிரியா,நைலான் கயிறு,ஒரு நடுப்பகல் மரணம்,மூன்று நிமிஷம் கணேஷ்,காயத்ரி,கணேஷ் x வஸந்த்,அப்ஸரா,மறுபடியும் கணேஷ்,வீபரீதக் கோட்பாடுகள்,அனிதா இளம் மனைவி,பாதிராஜ்யம்,24 ரூபாய் தீவு,வசந்தகாலக் குற்றங்கள்,வாய்மையே - சிலசமயம் - வெல்லும்,கனவுத்தொழிற்சாலை,ரத்தம் ஒரே நிறம்,மேகத்தைத் துரத்தினவன்,நிர்வாண நகரம்,வைரம்,ஜன்னல் மலர்,மேற்கே ஒரு குற்றம்,உன்னைக் கண்ட நேரமெல்லாம்,நில்லுங்கள் ராஜாவே,எதையும் ஒருமுறை,செப்டம்பர் பலிஹாஸ்டல் தினங்கள்ஒருத்தி நினைக்கையிலே,ஏறக்குறைய சொர்க்கம்,என்றாவது ஒரு நாள்,நில் கவனி தாக்கு,காந்தளூர் வசந்தகுமாரன் கதை,பெண் இயந்திரம்,சில்வியா.
குறும் புதினங்கள்
• "ஆயிரத்தில் இருவர்"
• "தீண்டும் இன்பம்"
• "குரு பிரசாத்தின் கடைசி தினம்"
• "ஆகாயம்"
சிறுவர் இலக்கியம்
• "பூக்குட்டி"
சிறுகதைத் தொகுப்புகள்
• ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
• நிஜத்தைத் தேடி
சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்
• நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
• நைலான் ரதங்கள்
நாடகங்கள்
• Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
• கடவுள் வந்திருந்தார்
• பாரதி இருந்த வீடு
• ஆகாயம்
கட்டுரைத் தொகுப்புகள்
• கணையாழியின் கடைசி பக்கங்கள்
• கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
• கடவுள் இருக்கிறாரா
• தலைமை செயலகம்
• எழுத்தும் வாழ்க்கையும்
• ஏன் ? எதற்கு ? எப்படி ?
• சுஜாதாட்ஸ்
• இன்னும் சில சிந்தனைகள்
• தமிழ் அன்றும் இன்றும்
• உயிரின் ரகசியம்
• நானோ டெக்னாலஜி
• கடவுள்களின் பள்ளத்தாக்கு
• ஜீனோம்
• திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
• காயத்ரி
• கரையெல்லாம் செண்பகப்பூ
• ப்ரியா
• விக்ரம்
• வானம் வசப்படும்
• ஆனந்த தாண்டவம்
பணியாற்றிய திரைப்படங்கள்
• ரோஜா
• இந்தியன்
• ஆய்த எழுத்து
• அந்நியன்
• பாய்ஸ்
• முதல்வன்
• விசில்
• கன்னத்தில் முத்தமிட்டால்
• சிவாஜி த பாஸ்
• எந்திரன்
• வரலாறு (திரைப்படம்)
• செல்லமே
மறைவு
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன

எண்டோசல்ஃபான் தீமைகள்




எண்டோசல்ஃபான் எனும் எம தூதன்.. எதிர்ப்புக் காட்டும் உலகம்...வக்காலத்து வாங்கும் இந்தியா..!


''விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்', மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்போகிறது'' என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.இதன் பிறகும்கூட, 'எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்' என்று சொன்னபடி... அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.அது மட்டுமா... சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, 'உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்' என்று முடிவெடுக்க... அந்தக் கூட்டத்திலும்கூட, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்?
ஆளையே காவு வாங்கிவிடும் 'எண்டோசல்ஃபான்' பூச்சிக்கொல்லிக்கு எதிராகச் சுழன்று கொண்டிருக்கும் தன்னார்வலர்களில் முக்கியமானவர்... கேரளாவைச் சேர்ந்த 'தணல்' எனும் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர். அவர் இதைப்பற்றி நம்மிடம் பேசியபோது, 'எண்டோசல்ஃபானை, 'பலரும் பூச்சிமருந்து'னு சொல்றாங்க. அது தப்பு... விஷம்னுதான் சொல்லணும். 'இரண்டாம் நிலை விஷப்பொருள்’னு உலகச் சுகாதார நிறுவனமும், 'முதல் நிலையில், இரண்டாம் பிரிவை சேர்ந்த நச்சுத்தன்மையுடைய பூச்சிக்கொல்லி’னு அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் எண்டோசல்ஃபானை அறிவிச்சிருக்கு.இத்தகைய நச்சுப்பொருளைத்தான், உணவுப் பொருள் உற்பத்தியில அளவுக்கு அதிகமா நாம பயன்படுத்துறோம். இதன் நச்சுத்தன்மை மனுஷங்களோட உடம்புல சுலபமா நுழைஞ்சிரும். மூச்சுக்குழாய் வழியா மட்டுமில்ல... தோல்ல இருக்கற நுண் துளைகள் வழியாகூட நுழையக்கூடிய சக்தி அதுக்கு உண்டு. நுரையீரல், வயிறுனு வசதியா அது இடம் புடிச்சுட்டா... சாமான்யமா அசையாது. மத்த நச்சுகள், மலத்தோட வெளியேறுற மாதிரி, இது வெளியேறாது. உடம்புலயே தங்கி, 'ஸ்லோ-பாய்சன்’ மாதிரி செயல்பட்டு ஆளையே காவு வாங்கிடும்.பயிர்கள்ல தெளிக்கப்படுற இந்த விஷம், காத்து மூலமா தண்ணியிலயும் கலந்திருது. அதை குடிக்கற கால்நடைகளின் ரத்தம் வழியா இறைச்சியில கலந்து, அதைச் சாப்பிடுற மனுசஷங்களோட ரத்தத்துலயும் கலந்து பல நோய்களை ஏற்படுத்துது. எண்டோசல்ஃபான் உள்ளிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உயிருக்கும் சூழலுக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்படுறதைத் தடுக்கவே முடியாது.
அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா? பூச்சிக்கொல்லிகளோட தன்மை, அதனால ஏற்படுற பிரச்னைகள் இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவை பத்தின உண்மை நிலையை அரசுக்கு அறிக்கையா கொடுக்கறதோட, தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்து வைக்கறதுக்காக 'மத்தியப் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கழகம்' இயங்கிக்கிட்டிருக்கு. ஆனா, இந்த அமைப்பு தனியார் முதலாளிகளோட கட்டுப்பாட்டுலதான் முழுக்க இயங்கிக்கிட்டிருக்கு.கேரளாவோட காசர்கோட்டுல நடந்த விபரீதங்கள் (பார்க்க, பெட்டிச் செய்தி) கண்முன் சாட்சிகளா இருக்கு. அதை அடிப்படையா வெச்சே எண்டோசல்ஃபானைத் தடை செய்யலாம். பெரும்பாலான உலக நாடுகள் தடை விதிச்ச பிறகும், நம்ம அரசு அசையாம இருக்கு. 1952-ம் வருஷமே அமெரிக்காவுல டி.டி.டி ரசாயன மருந்தைத் தடை பண்ணிட்டாங்க. ஆனா, 50 வருஷம் கழிச்சு, 2002-ம் வருஷம்தான் இந்தியாவுல அதைத் தடை பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டுல வாழற மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துற ரசாயனம், அடுத்த நாட்டுல இருக்கற மக்களை வாழவா வைக்கும்? இந்த அடிப்படை அறிவுகூடவா நம்ம அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்காது? இல்ல... அமெரிக்காவுல இருக்கறவங்கதான் வாழத் தகுதியான மனுஷங்க... இந்தியா மாதிரியான நாடுகள்ல இருக்கறவங்க வாழத் தகுதியில்லாத இழிபிறவிங்களா?'' என்று கொதிப்புடன் கேட்ட ஸ்ரீதர்,


''போபால் விஷ வாயுக் கசிவு மாதிரியான மிகமோசமான விளைவுகள் ஏற்படுறதுக்குள்ள எண்டோசல்ஃபானை அரசு உடனடியா தடை செய்யணும்' என்று தங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்!
நாசமாகும் நரம்பு மண்டலம்!
தமிழகத்தில் எண்டோசல்ஃபான் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 'செரின்' அமைப்பின் நிர்வாகி ஜேம்ஸ் விக்டர், ''தமிழகத்தில், எண்டோசல்ஃபான் பாதிப்பு பற்றி சரியான ஆவணங்கள் இல்லை. அதனால், என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து இங்கே யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம்... இதுதான் என்று தெரியாமலேயே பலவகையான பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளுக்கு அதை தெரிவிக்க, நாம் தவறி விட்டோம்.இந்தப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிர்ச்சூழல் மிகப்பெரிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எண்டோசல்ஃபானின் நச்சுத் தன்மை, மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. இதை அதிகமாக நுகரும்போது தலைவலி, மயக்கம், சோர்வு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. அளவு கூடும்போது, கடும் விஷமாக மாறி, உயிருக்கே உலையாகிவிடும். புரோட்டின் குறைவாக உள்ளவர்களை இதன் நச்சு எளிதாக தாக்கும். இதனால் தோலில் வெடிப்புகள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொடர் பாதிப்புகளும் ஏற்படும்.
எண்டோசல்ஃபான் தெளித்த வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், விந்துப் பைகள் செயலிழந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, கண்பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. பயிர்களில் தெளிக்கப்படும்போது நீரிலும், பழம் மற்றும் காய்கறிகளிலும் ஏழு நாட்கள் வரை இதன் வீரியத் தன்மை இருக்கும். அதேசமயம், மண் துகள்களில் அவை படிந்து 60 முதல் 800 நாட்கள் வரை வீரியம் குறையாமல் இருக்கும். எனவே, உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். எண்டோசல்பானைத் தடை செய்ய இந்தியா உடனடியாக முன்வரவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
கல்யாணமா... கருமாதியா... என்பதை இனியாவது அரசு முடிவு செய்தால் நல்லது!.

நன்றி - பசுமை விகடன்

நட்பு-Dedicated to final year IT


இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.
இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை..
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?

பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?

இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.

ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று…?

தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.

பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.

ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.

Monday, May 23, 2011

குட்டி கதை


ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.
ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.
யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

புற்றுநோய்' புத்தகம்.. இந்திய அமெரிக்கருக்கு புலிட்ஸர்!



இந்திய அமெரிக்க மருத்துவர் சித்தார்த்த முகர்ஜி எழுதிய 'தி எம்பெரர் ஆஃப் ஆல் மாலடிஸ்: எ பயோகிராஃபி ஆஃப் கேன்சர்' (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புத்தகத்துக்கு ஃபிக்ஷன் அல்லாத பிரிவின் கீழ் 2011-ம் ஆண்டுக்கான புலிட்ஸர் விருது கிடைத்துள்ளது. எழுத்துலகில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் புலிட்ஸரை வென்றுள்ள மருத்துவர் சித்தார்த்தாவின் புத்தகம், புற்றுநோயை ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறது விரிவாக அலசுகிறது.புற்றுநோயின் தோற்றம் தொடங்கி, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என நீண்ட வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்தா. புலிட்ஸர் விருதுடன் 10 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை அவர் பெறவுள்ளார்.
டெல்லியில் 1970-ம் ஆண்டு பிறந்த சித்தார்த்த முகர்ஜி, ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பெற்றார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் அவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழ மருத்துவ மையத்தில் புற்றுநோய் மருத்துவராகவும் உள்ளார்.புலிட்ஸர் விருது பெற்றுள்ள இவரது புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைக் காண.

கார்ட்டூன் கலாட்டாஸ்-தமிழ்நாடு




83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா - லாஸ் ஏஞ்சல்ஸ்





83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது 'தி கிங்ஸ் ஸ்பீச்' படத்தின் இயக்குநர் டாம் ஹூப்பருக்கு வழங்கப்பட்டது.
'பிளாக் ஸ்வான்' படத்தின் நாயகி நதாலி போர்ட்மேனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை காலின் ஃபிர்த் பெற்றார். 'தி கிங்ஸ் ஸ்பீச்' படத்தில் நடித்ததற்காக காலின் ஃபிர்த்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
வாய்ப்பை இழந்தார் ஏ.ஆ.ரஹ்மான்...
சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டிற்கான சிறப்பு பின்னணி இசைக்கான விருதை 'தி சோசியல் நெட்வொர்க்' படத்திற்காக டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விருதுப் பட்டியல்...
சிறந்த நடிகர் - காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)
சிறந்த நடிகை - நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)
இயக்குநர் - டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)
இசை (ஒரிஜினல் பாடல்) - டாய் ஸ்டோரி 3
சிறந்த எடிட்டிங் - தி சோஷியல் நெட்வொர்க்
விஷூவல் எபக்ட்ஸ் - இன்செப்ஷன்
சிறந்த டாக்குமென்டரி - இன்சைட் ஜாப்
குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - காட் ஆப் லவ்
காஸ்ட்யூம் வடிவமைப்பு - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
மேக்கப் - தி உல்ப்மேன்
ஒலிக் கலவை - இன்செப்ஷன்
இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)
சிறந்த துணை நடிகை - மெலிஸா லியோ (தி பைட்டர்)
சிறந்த வெளிநாட்டுப் படம் - இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)
திரைக்கதை (ஒரிஜினல்) - தி கிங்ஸ் ஸ்பீச்
திரைக்கதை (தழுவல்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த அனிமேஷன் படம் - டாய் ஸ்டோரி 3
அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்
ஒளிப்பதிவு - இன்செப்ஷன்
கலை இயக்கம் - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்

தேசிய விருதுகள்:புதுடெல்லி, மே 19,2011





தேசிய விருதுகள்: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா; சிறந்த இயக்குனர் வெற்றிமாறன்!
புதுடெல்லி, மே 19,2011



58-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், முக்கிய விருதுகளை வென்று தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.சிறந்த நடிகர் தனுஷ்...'ஆடுகளம்' படத்துக்காக, தனுஷ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன், 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாளப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை, நடிகர் சலிம் குமார் பெறுகிறார்.இம்முறை சிறந்த நடிகர் பிரிவில் இருவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.வெற்றி மாறனுக்கு 2 விருதுகள்...ஆடுகளம் படத்துக்காக சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் ஆகிய இரு பிரிவுகளிலும் தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார், இயக்குனர் வெற்றி மாறன்.
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் சினிமா பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவரான வெற்றி மாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தனது தனித்துவத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர்.
ஸ்பெஷல் மென்ஷன் எனும் சிறப்புப் பிரிவில், ஆடுகளம் படத்துக்காக வி.ஐ.எஸ். ஜெயராமனும் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கெளரவிக்கப்பட்ட 'தென்மேற்குப் பருவக்காற்று'...
வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாவிட்டாலும், ஆழமான கதைக் களத்தைக் கொண்ட 'தென்மேற்குப் பருவக்காற்று', சிறந்த மாநில மொழி திரைப்படம் பிரிவில், சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை சரண்யா...
தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் பிரிவுக்கு இணையாக உயரியதாக போற்றப்படும், சிறந்த நடிகை விருதை, 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்துக்காக நடிகை சரண்யா பொன்வண்ணன் பெறுகிறார்.
இம்முறை சிறந்த நடிகை விருதும் இருவருக்கு வழங்கப்படுகிறது. மராத்தியின் 'பாபூ பந்த் பாஜா' என்ற படத்துக்காக நடிகை மிதாலீ ஜக்தாப் பரந்தர் என்ற நடிகையும் இவ்விருதை வென்றுள்ளார்.
வைரமுத்துக்கு விருது...
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்காக, கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
தம்பி ராமையா...
'மைனா' படத்துக்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த உறுதுணை (சப்போர்ட்டிங்) நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
நகைச்சுவை நடிகராக வலம் வந்த தம்பி ராமையா, 'மைனா' படத்தில் நகைச்சுவையையும் தாண்டி உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அசத்தி, ரசிகர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது கவனத்துக்குரியது.
உறுதுணை நடிகை...
சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதை சுகுமாரி பெறுகிறார். இவர், 'நம்ம கிராமம்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விரு வழங்கப்படுகிறது.
சிறந்த நடன இயக்குனர்...
ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடன இயக்குனர் விருதை, தினேஷ் குமார் தட்டிச் சென்றுள்ளார்.
சிறந்த படத்தொகுப்பு..
சிறந்த படத்தொகுப்பான விருதினை ஆடுகளம் படத்துக்காக எடிட்டர் டி.இ.கிஷோர் வென்றுள்ளார்.
பிற விருதுகள் (தமிழுக்கு)...
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதினை 'நம்ம கிராமம்' படத்துக்காக இந்திரன்ஸ் ஜெயன் பெறுகிறார்.
சினிமா குறித்த எழுத்துப் படைப்புக்காக, ஓவியர் ஜீவா எழுதிய 'திரைச்சீலை' என்ற புத்தகம் தேசிய விருதை வென்றுள்ளது.
எந்திரனுக்கு 2 விருதுகள்...
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான 'எந்திரன்', இரண்டு பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றுள்ளது.
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் எந்திரன் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த திரைப்படம் 'ஆதாமிண்டே மகன் அபு'!
58 தேசிய திரைப்பட விருதுகளில், இந்திய அளவில் சிறந்த திரைப்படத்துகான விருதை மலையாள மொழியின் 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற படம் வென்றுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை சல்மான் கான் நடித்த 'தபாங்' கைப்பற்றியுள்ளது.

Sunday, May 22, 2011

இது ராஜ திருமணம் !




பிரிட்டன் அரசி எலிசபெத் பேரனும் , பட்டத்து இளவரசர் சார்லஸ்சின் மகனுமான வில்லியம்ஸ் -கதேமிடில்டன் திருமணம் கோலாகலமாக நடந்தது. புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபே சர்ச்சில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

MEET THE TALENTIA!!!



An Indian man walks into the New York City bank and asks for the loan officer. He tells the Loan Officer that he was going to India for some business for 2 weeks and needs to borrow $5,000. The Loan Officer tells him that the bank will need Some form of security for the loan. So the Indian man hands over the keys and the documents of the new Ferrari car parked on the street in front of the bank. The loan officer consults the president of the bank, Produces all the required items and everything check out to be OK. The loan officer agrees to accept the car as a security for the loan. The bank president and the Loan Officer had a good laugh at the Indian For keeping a $750,000 Ferrari as a security and taking only $5,000 has a loan. An employee of the bank then drives the Ferrari Into the banks underground garage and parks it there. Two weeks later the Indian returns and pays $5000 and the interest which comes to it $15.41. Seeing this, loan officer says, “Sir, we are very happy to have your business And this transaction has worked out very nicely, but we are a little puzzled. While you are away, we checked you out and Found out that you were a multi millionaire. What puzzled us was why would you bother to borrow $5000?” The Indian replies "Where else in the New York City can I park my car for 2 weeks and For only $15.41 and expect it to be there when I return". This is a true incident and the Indian is none other than Vijay Mallya????